Monday, December 21, 2015

சிறுநீரகக்கல்லா..?

எதை எதையோ share பண்ணறீங்க இதை தயவு செய்து பகிருங்கள்....!!!
யாரோ ஒருவருக்கு பயன்படும்...!!!
சிறுநீரகக் கல்...!!!
இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

Wednesday, October 28, 2015

  இன்றைய  பகுதிநேர  பயிற்றுநர்களின்  மனநிலை

       இன்றைய  பகுதிநேர  பயிற்றுநர்களின்  மனநிலை , 
          நாம்  பணியமர்ந்து,  நான்கு  ஆண்டுகள்    ஆகின்ற நிலையில்  இன்னும்  பணி  நிரந்தரம்   இல்லை   எத்தனை  முறை  முயன்றும்  பலனில்லை ,  என்ற   ஏக்கத்துடன் ,  எதிர்பார்ப்புடனும் ,  நாளும்  நாட்களை  எண்ணியபடி  விரக்தியடைந்த  நிலையில்  உள்ளனர் .
        ஆனால் ,  நமக்கெல்லாம்  ஒரு  விஷயம் ,  நினைவில்  கொள்ள வேண்டும் . 
           கிட்டத்தட்ட  முப்பது  ஆண்டுகளாக   ஏன்   ,  கடந்த   ஆட்சியில்  கூட  நம்மை  பற்றி  நினைத்துப்  பார்க்க   ஆளில்லை . . 
            இந்த  பொற்கால ஆட்சியில்   நம்மையும்   ஆசிரியர்களாக்கி  அழகு  பார்க்கின்றனர் . .
             ஆனால்  நம்மில்  சிலர்  பணிநிரந்தரத்தை  எண்ணி  கவலை  கொள்கின்றனர் , 
              ஆசிரியர்ப் பணிக்காக  இலட்சக்கணக்கில்  பணம்  செலவழிக்க  காத்திருக்க . ......நாம்  ......
              இவ்வேலை  இல்லாமல் ,   இருந்தால்  நாம்   என்னவாயிருப்போம்.. யோசித்து  பார்ப்போமா.......
               தனியார்  நிறுவனத்தில்  பணியாற்றி  வரும்  நம்  ஆசிரியர்  நிலைகளை  நம்  ஆசிரியர்களையே விசாரித்தால் நிலை   புரியும் . ..
               இனி  யாரும்  வருத்தப்பட  வேண்டிய  நிலை   இல்லை . .
             விரைவில்  நமக்கான  ஆணை  வரவிருக்கிறது . ....
              மரத்தை  நட்டவர்கள்  தண்ணீர்  விடாமலா... போவார்களா.....!!!!!!!
             நாம்  வாடினால்  முதலில்  வருத்தம்   அடைவது   அவர்களாகத்தான்...இருக்க  முடியும் . ....
என்பதை  மறவாதீர் . ......
      

Tuesday, October 20, 2015

Deepavali gift...

My Advance  Deepavali gift...   

Open the link and touch anywhere on the screen✨

http://goo.gl/2UoUaw

Worth reading: Deep Meaning

Worth reading: Deep Meaning

You were born in a first class hospital, I was delivered at home, we both survived.

You went to a private primary school and I went to a public school, we both ended in the same high school.

You woke up from the bed and I woke from the floor, we both had a peaceful night rest.

Your outfits are all expensive, mine are all simple and cheap, we both still cover our nakedness.

You ate fried rice and roasted chicken, I ate local made food but we both still ate to our satisfaction.

You ride on Lexus jeep, Range Rover, G Wagon, Hummer Jeep and I use public transport but we still got to our various destination.

You may be reading this post from your Sony xperia, BB Z10, Q10, Samsung Galaxy 6edge, IPhone6+ and I typed it with my Touch one broken screen, we still see the message.

Lifestyle is not a competition and there are different ways to get a lot of things done, different lanes all leading to the same destination. Just because your neighbour is doing things faster does not mean you are failing.

Happiness doesn't come from having everything, but making the best out of what you have, it's all about how you see yourself.

Happiness is not having what you like. Happiness is liking what you have and being content...

Thursday, September 24, 2015

வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம் !! !!

    குதி நேர  வேலை..அரை  நாள்        வாத்தியார்... 3  நாள்  வாத்தியார்...வாத்தியார்   அல்ல  பயிற்றுநர்.... இது  அலுவலகத்தில்  மற்றும்  பொது இடங்களிலும்...நம்மை   அழைக்கப்படும்  இடு  குறி பெயர்கள்.... Rs:60,000 /-முதல்    சம்பளம்  வாங்கும்  ஆசிரியர்களால்  அழைக்கப்படும்  நம்  அவப்பெயர்......இது  போக   அலுவலக  வேலை  இதர  வேலையை  செய்யவும்  வற்புறுத்த  படுகிறோம்.
     இந்த  நிலை தொடர வேண்டுமா???
               மாற்றம்  வேண்டாமா ??
          பணி  நிரந்தரம்  வேண்டாமா?

உணர்வு   உள்ள  பயிற்றுநர்களே!!
பணி  நிரந்தர ஆசிரியர்  ஆக,  நம்    அண்ணன்  திரு.சோலை  M. ராஜா 
அவர்களின் வழிகாட்டுதலின்படி  ஒன்றினைவோம் ..
     நமது  வாழும்  தெய்வம்   நமக்கு பணி நிரந்தரம்  ஆணை  வழங்க உள்ள             புரட்சி  தலைவி  அம்மா !!!!
அவர்களுக்கு  நன்றி  தெரிவித்து  அவர்களுக்கு  ஆதரவாக   எந்நிலையிலும்           இருப்போம் ...என்பதை  நினைவு  கூற......
பணி நிரந்தரம் வேண்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொண்டு  தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் "பணி  நிரந்தரம் வேண்டி மாபெரும் கவன ஈர்ப்பு முழக்கம்"பகுதிநேர ஆசிாியர்களே  அலை கடல் என திரண்டு  வாரீர்!!!                    உணர்வு உள்ள அனைவரும் திரண்டு வாரீர்!!!                             நம் உரிமையினை வெல்ல அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வாரீர்!!                    நாள்: 26.09.2015. சனிக்கிழமை                 நேரம்:காலை 9 முதல் 12 மணி வரை இடம்:விருந்தினர் மாளிகை அருகில், சேப்பாக்கம், சென்னை.                

Monday, September 21, 2015

''கவன ஈர்ப்பு முழக்கம் '!'

நாகை   மாவட்ட  பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் 20/09/2015, ஞாயிறு   காலை நாகை   ஓய்வு  ஊழியர்கள்  சங்க  கட்டடத்தில்    நடைபெற்றது.. சங்க  தலைவர்  திரு, ஜான்சன்   தலைமை  தாங்கினார் .பணி  நிரவல்  இரத்து , பணி  நிரந்தரம்  போன்ற  கோரிக்கைகள்  நிரைவேற்றப்பட்டன . வேதாரண்யம்    ஒன்றியத்திற்கு  தலைவராக  திரு,கார்த்திக்கேயன்  Msc,Bed, அவர்களை  திரு, ஜான்சன்  அவர்கள்  நியமனம்  செய்தார்,   26/09/2015, அன்று சென்னையில் அனைத்து மாவட்ட ங்களும் பங்கேற்க்கும் ''கவன ஈர்ப்பு முழக்கம் '!' நிகழ்ச்சிக்கு  அனைவரும்  பங்கேற்க வேண்டும் .  பேருந்து கட்டணம் ரூ 500ஐ  22செல்வாய்கிழமை க்குள்  கொடுத்து பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப் பட்டது..வேதாரண்யம்   ஒன்றியம்  திரு,  கார்த்திக்கேயன்  அவர்களை  தொடர்பு  கொள்ளவும்  ..                                   தொடர்பு  எண்: +919943774464

Friday, September 18, 2015

திறமைக்கு ஒரு குட்டி கதை...!

நிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை...!
ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.

அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.

சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.

இதைக் கேட்ட சிங்கம்  "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.

இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.

உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.

குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.

இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,
"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.

இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.

---

நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். "கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்".

குழந்தையின் தகப்பன்

ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து அப்பெண் கருவுற்றாள். உடனே கணவன் ஆனந்தக் கூத்தாடினான்.ஊரையே அழைத்து விருந்து வைத்தான். மனைவியை நன்றாக கவனித்துக் காெண்டான்.

இப்படியே மூன்று மாதங்கள் சென்றது.ஒரு நாள் பிறக்கும் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிப்பதற்காக கணவன் ஒரு சாேதிடரை நாடிச் சென்றான். அப்பொழுது தான் விதி சாேதிடர் ரூபத்தில் விளையாடியது.

சாேதிடர் அவனது ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து விட்டு இக்குழந்தை பிறந்த உடன் "குழந்தையின் தகப்பன் "இறந்து விடுவார் என்று கூறினார். இதைக் கேட்ட அக்கணவன் மிகுந்த அதிர்ச்சியுற்றான். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் காெண்டு அழுதான். அவன் நேராக வீட்டிற்கு சென்று மனைவியிடம் நடந்ததை கூறினான்.

இச்செய்தி கேட்டவுடன் அவன் மனைவி மயக்கம் பாேட்டு விழுந்து விட்டாள்.உடனே கணவன் பதறி பாேய் தண்ணீர் தெளித்து மனைவியின் மயக்கத்தை தெளிய வைத்தான்.
மயக்கம் தெளிந்தவுடன் மனைவி பேயறைந்தவள் பாேல் காணப்பட்டாள்.முகம் மிகவும் வெளிறிப் பாேய் இருந்தது. கணவனிடம் உடனே கருவை கலைத்து விடலாம் என்றாள்.

கணவன் உடனே சற்று பாெறுமையாக இரு இன்னும் நாலைந்து சாேதிடரை பார்க்கலாம் என்று சாெல்லி விட்டு அதன்படியே சில சாேதிடர்களை பார்த்தான். அனைவரும் அவனது ஜாதக பலனை பார்த்து விட்டு முதல் ஜாேதிடர் சாென்னதையே சொன்னார்கள்.கணவன் உடனே மனம் தளர்ந்து பாேய் விட்டான்.

அவனது மனைவியின் ஆலாேசனைப்படியே இருவரும் கருவை கலைக்க ஒரு மருத்துவரை நாடிச் சென்றார்கள்.மருத்துவர் மனைவியை பரிசாேதித்து விட்டு கரு வளர்ந்து விட்டது.இனி மேல் கலைக்க முடியாது என்று கூறி விட்டார்.

வீட்டிற்கு வந்தவுடன் அன்றிரவே அவன் மனைவி தற்காெலைக்கு முயன்றாள்.கணவன் அவளை காப்பாற்றி,அவளுக்கு "விதியை மதியால் வெல்லலாம்" எனஆறுதல் கூறி விட்டு இதற்கு மேல் அவள் இந்த மாதிரி செய்யாமலிருப்பதற்க்காக மூன்று பேரை காவலுக்கு வைத்து விட்டான்.அவனும் அவள் கூடவே இருக்க ஆரம்பித்தான்.

கணவனுக்காக தினந்தாேறும் காேவில் கோவிலாக அர்ச்சனை செய்யப்பட்டது. சர்வ மத பிராத்தனைகளும்
நடத்தப்பட்டன.

அவன் மனைவி மட்டும் நாளுக்கு நாள் மிகுந்த பதட்டமாகவே காணப்பட்டாள். நாளுக்கு நாள் அவள் முகத்தில் பீதி அதிகரித்தது.கணவனாே நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக இருந்து விட்டான்.

அந்த நாளும் வந்தது. மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். மனைவியின் உடல் மட்டும் பீதியின் காரணமாக, நடுக்கத்துடன் இருந்தது. குழந்தையும் பிறந்தது..!!!

குழந்தை பிறந்த....

உடனே....

உடனே.....

உடனே.....

உடனே....

"பக்கத்து வீட்டுக்காரன் மண்டையை பாேட்டு விட்டான்"

😝😜😛😜😝😛😜😝😛

இந்த பாருங்க  மக்களே எனக்கு  அனுப்புனவன் இப்படி தான் அனுப்புனான் என் மேல தப்பு இல்லை..

Thursday, September 10, 2015

"மாபெரும் நன்றி அறிவிப்பு மற்றும் பணி நிரந்தரம் வேண்டி கவன ஈர்ப்பு கூட்டம்"

தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு குழு தலைவர் சேர்மன்.
திரு.சோலை.எம்.ராஜா அவர்கள் தலைமயில் 05.09.2015 சனிக்கிழமை  மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி கூட்டமைப்பின் முதன்மை மாநில நிர்வாகி திரு.வெ.முருகதாஸ் அவர்கள் இன்று சென்னை மாநகர காவல் துறை ஆணையாளரை சந்தித்து தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா அவர்களுக்கு "மாபெரும் நன்றி அறிவிப்பு மற்றும் பணி நிரந்தரம் வேண்டி கவண ஈர்ப்பு கூட்டம்" சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் மரத்தடி நிழலில் காலை 10 மணி முதல் மாலை 3.00 மணி வரை 19.09.2015 மற்றும் 26.09.2015 ஆகிய இரு தேதிகளில் ஒரு தேதியை வழங்குமாறு அனுமதி கடிதம் கொடுத்துள்ளார்.  எனவே மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்கவும்

துன்பமென ஒவ்வொரு நாளும் விடியாதா?

துன்பமென  ஒவ்வொரு  நாளும்  விடியாதா? என்று காத்திருக்கும்  பகுதி நேர பயிற்றுனர்களே !!!!  நமது  நாள்  வெகு  தூரம் இல்லை ....நாம்  பாக்காத  அமைச்சர் இல்ல,,,,,,நாம்  திரட்டாத செய்திகள்  இல்ல .......உறுதியுடன்  வென்றிடுவோம்

Monday, September 7, 2015

பகுதி நேர பயிற்றுநர் கோமகனுக்கு கலெக்டர் பழனிசாமி பாராட்டு

17/08/2015.,நாகை:தமிழக  பகுதி  நேர பயிற்றுநர்கள்  பணி  நிரந்தரம்  அடைய  வேண்டி  கடந்த  நான்கு  ஆண்டுகளாக  தொடர்நது  இரத்த  தானம்  செய்து  நாகை  மாவட்ட  கலெக்டர்  பழனிசாமியை  வெகுவாக  கவர்ந்து பகுதி நேர பயிற்றுநர்களின்  உயிர்  மூச்சான
திருவாளர்  மதிப்புமிகு  கோமகன்  அவர்கள்  நாகை  மாவட்ட  கலெக்டர்  அவர்களிடம்  விருது  பெறப்பட்டு16,549 ஆசிரியர்களுக்கு
பெருமை  சேர்த்துள்ளார் . ....

Saturday, August 15, 2015

பகுதி நேர பயிற்றுநர்கள் .!!!!!

பகுதி நேர பயிற்றுநர்கள்  .!!!!!
       நாம் பணியமர்ந்து  நான்கு ஆண்டுகள் ஆகிய  நிலையில்  பணி  ஊர்ஜிதம்  
ஆகாமல் , அல்லல்  பட்டு வருகிறோம் .இப்பணியை தொடர்ந்து சென்று பணி நிரந்தரம் ஆவோம் .என்ற  கற்பனையில் வாழ்ந்து  வருகிறோம்.இப்பணியில்  நாம் அடையாத  துயரில்லை ..நமக்கு பிறகு தகுதி தேர்வின் முலம் வந்தவர்கள் .ஊதிய  உயர்வு அடைந்து  அதற்கான  பணி நிமிர்த்த  ஆணையை ..நாமே  டைப்  அடித்து  கொடுக்கும் .துயரம் .சொல்ல  வாயில்லை ..நாம்  எந்த விதத்தில் தகுதி இழந்தோம் ...சீனியர்  என்று  சொல்லி வேலை  வாங்கும் ..அதிகாரிகளும் இவர்கள் என்ன  வேலை  பார்கிறார்கள் ..என்ற  கேலி பேச்சும்தான் .மீதம் ...இது போக  வெளியில் சென்று  வேலை பார்த்தால்  அவர்களின் நெஞ்சை பிளக்கும்  சொற்கள்  வேறு நம் என்ன  செய்ய?????? 

அரசு  பணி நிரந்தரம்  என்ற பதில்  அளிக்குமா???? 

வரும் சட்ட  சபையை  எதிர்நோக்கும்  பகுதி நேர பயிற்றுநர்கள்..????? 

Wednesday, August 5, 2015

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது..


தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்

கர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!


கர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!
கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்கள் எந்த ஒரு உணவிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் ஒருசில உணவுகளில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே தான். பொதுவாக அனைவருக்கும் ஒருசில பழங்களை சாப்பிட்டால் தான் கருச்சிதைவு ஏற்படும் என்று தெரியும்.
ஆனால் பழங்கள் மட்டுமின்றி, ஒருசில காய்கறிகளின் மூலமும் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் இந்த காலத்தில் தான் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே இக்காலத்தில் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடனே வேலையை காண்பித்துவிடும். அதற்காக அதனை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. ஆனால் மிகவும் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.
இதற்கு காரணம் அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள் தான். ஏனென்றால் வைட்டமின்கள் அதிகமாக இருந்தால், இரத்தக்கசிவு ஏற்படுவதோடு, கடுமையான வலியையும் உண்டாக்கும். எனவே கீழ்கூறிய சில காய்கறிகளை பிரசவத்திற்கு முன் தவிர்ப்பது நல்லது.
• கத்திரிக்காயில் இரும்புச்சத்து அதிகம் இருந்தாலும், இதனை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொண்டால், இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது.
• கர்ப்பிணிகளுக்கு ஒரு ஆபத்தான ஒரு கீரை என்றால் அது வெந்தயக்கீரை தான். ஏனெனில் வெந்தயக் கீரையை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இந்த கீரையை கர்ப்பிணிகள் இறுதி மூன்று மாதங்களில் தொடவேக் கூடாது.
பசலைக் கீரையை அதிகம் உட்கொண்டாலும், கருச்சிதைவு ஏற்படும். அதிலும் இந்த கீரையை தினமும் உட்கொண்டு வந்தால், விரைவில் கருச்சிதைவு ஏற்படும். எனவே இந்த கீரையை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் போதும்.
• கசப்பு தன்மையுடைய ப்ராக்கோலியை தினமும் கர்ப்பமாக இருக்கும் போது உட்கொண்டால், அது கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் இதனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தினமும் உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
• கர்ப்பமாக இருக்கும் போது காலிஃப்ளவர் சாப்பிட்டால் நல்லது என்று சொன்னாலும், இதனை கோபி மஞ்சூரியன் போன்று செய்து சாப்பிட்டால், பின் கர்ப்பமானது பிரச்சனையாகிவிடும். ஏனெனில் இதிலும் வைட்டமின் சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.
• குடமிளகாயின் சுவை அனைவரையும் ஈர்க்கும். ஆனால் இதனை சாப்பிட்டால், கர்ப்பத்தில் பிரச்சனை ஏற்படும். ஆகவே பிரசவம் முடியும் வரை இதனை சாப்பிடுவதை சற்று தவிர்க்கலாமே

நல்லவருடன் பழகுங்க

நல்லவருடன் பழகுங்க!
கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர். கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார். கடனுக்கு பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர். பக்தி மிக்க அவர் பக்தி பாடல்களையும் அவ்வப்போது பாடுவார். அந்தப்பாடல்களைக் கேட்டால் கல்லும் கரைந்து விடும். மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார். அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக...்க மாட்டார். அறிமுகமே இல்லாத நபராக இருந்தால் கூட, கடையைச் சற்றுநேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போய் விடுவார். ஒருநாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்து விடுவேன், என்று கேட்டார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன்.
கடைக்காரரும் கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் வந்த சிலரிடம் காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன். பணப்பெட்டியும் திறந்தே இருந்தது.அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த நண்பன் ஒருவன் அங்கே வந்தான். அடேய்! திருடுவதற்கு இதை விட சரியான சமயம் நமக்கு கிடைக்காது. பணம், சாமான்களை கட்டிக் கொண்டு ஓடி விடலாம், என்று யோசனை கூறினான்.திருடனுக்கோ திருடுவதா வேண்டாமா என்ற தயக்கம்... தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் சிந்தித்தவன், தன்னை நம்பிய கடைக்காரருக்குத் துரோகம் செய்ய மனமில்லை. என்று சொல்லி நண்பனிடம் மறுத்து விட்டான்.சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்து விட்டார். அவரிடம்,எல்லாப் பொருளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள், என்றான். கடைக்காரரோ,ஏன் இப்படி கேட்கிறாய். உன் மீது கொண்ட நம்பிக்கையால் தான் கடையை ஒப்படைத்துச் சென்றேன். அதனால், பணத்தையோ, பொருளையோ சரி பார்க்கத் தேவையில்லை, என்றார்.கடைக்காரரின் நம்பிக்கை மிக்க பேச்சை கேட்டதும் திருடனின் வருத்தம் அதிகரித்தது. உங்களைப் போன்ற நல்லவர்களுடன் ஒருநாள் பழகியதற்கே மனம் இவ்வளவு துõய்மையாகி விட்டதே. வாழ்நாளெல்லாம் உங்களோடு உறவாடினால் பிறவிப்பயனே கிடைத்து விடுமே! என்றான்.கடைக்காரர், நீ சொல்வது புரியவில்லையே! என்றார்.ஐயா! என்னை மன்னியுங்கள். நான் ஒரு திருடன். என் நண்பனும், நானும் கடையில் திருடி விட்டு ஓட எண்ணினோம். ஆனால், நல்ல வேளையாக என் இயல்பான திருட்டுக் குணம் இன்று மறைந்து விட்டது. இனி ஒருநாளும் திருட மாட்டேன், என்று அழுதான். கடைக்காரரின் காலில் விழுந்து வணங்கினான். இப்படி திருடனைக் கூட திருத்தி பக்தராக மாற்றிய அந்தக் கடைக்காரர் வேறு யாருமல்ல. ஞானி துக்காராம் தான்!

முதலில் உன்னை நீ அறிந்து கொள்.



முதலில் உன்னை நீ அறிந்து கொள். அதன்பின், கடவுளை அறியலாம்.
கடவுளின் கருணை என்னும் காற்றானது, எப்போதும் உன் பக்கம் வீசிக் கொண்டு தான் இருக்கிறது.
தீவிர அன்பு இருக்குமானால், உனக்கு கடவுளின் தரிசனம் கிடைப்பது உறுதி. எங்கும் அன்பு, எதிலும் அன்பாயிருங்க பழகிக் கொள்ளங்கள்...
தனிமையில் இருக்கும் போதும் மனதால் கூட பாவச்செயலில் ஈடுபடாத மனிதனே தர்மவான்.
மனதை பக்தியின் பக்கம் திருப்புங்கள்.. ஆனால்மூடத்தனத்திற்க ஒர் நாளும் இடமளிக்காதீர்கள்,எண்ணங்கள் அனைத்தம் தூய்மை பெறமானால் உலகமுழுமையும் உங்கள் வசமாகும் ..இன்றைய நற்சிந்தனைகளின் வழிநடப்போம்.அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.


ையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.
அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு சிறுமி, தனது தந்தை வந்து அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
சிறுமியை தனது காரில் வீட்டில் இறக்கிவிடுவதாக இளவரசர் தெரிவித்தார். அதற்கு சிறுமியோ முன் பின் தெரியாதவர்களுடன் பேசக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளதாக கூறினார்.
உடனே உதவியாளர் அச்சிறுமியிடம் இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.
இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.
இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
நம் ஊர் 'சாக்கடை கமிஷன்' கவுன்சிலர்களாவது இதைச் செய்வார்களா???????

முதலிரவு அன்று 'அலுப்பாக இருந்தால் தூங்கு'


முதலிரவு அன்று 'அலுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.......!
காலையில் எனக்கு முன்பே விழித்து இருந்தாலும் நான் எழுப்பி விடும் வரை காத்திருப்பதும்.......'
கால் விரல்களில் இறுக்கமாக மாட்டிக்கொண்ட மிஞ்சியை (மெட்டி) பற்களாலேயே கடித்து எடுக்கும் போதும்.......!
என் கர்ப்ப காலத்தில் என்னைவிடவும் என்னையும் குழந்தையையும் பேணி கவனித்துக்கொண்ட போதும்.......!
விடுமுறை நாட்களில் கூட வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருக்கும் போதும்........!
வேலைக்கு செல்லும் சமயத்தில் சாமி கும்பிட மறந்தாலும் என் நெற்றியில் முத்தமிட மறக்காத போதும்........!
செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அசிங்கமாக திட்டும்போதும்....!
என் வீட்டில் இருந்து யார் வந்தாலும் அவர்களிடம் பேச கூச்சப்படும் போதும்; ஆனால் அவர்களிடமும் மறக்காமல் என்னை கிண்டல் செய்யும் போதும்.......!
என் பிறந்தநாளையும் எங்கள் திருமண நாளையும் மறந்து என்னிடம் மன்னிப்பு கேட்கும் போதும்..!
மெகா சீரியல் அன்று கிரிக்கெட் இருந்தால் ஹைலைட்சிலேயே திருப்தி பட்டுக்கொள்ளும் போதும்.......! நினைத்துக்கொள்வேன்,....
ஏனென்றால்...
நீ எனக்கு கிடைத்த வரம் என்று.. என்றும் இருப்பேன் உன் அன்பாக.. என்றும் உன் மீது எனக்கு அன்பு மாறாதுடா....
படித்ததில் ரசித்தது

Tuesday, August 4, 2015

Friends, there are many such people who struggled..

"I slept on benches and
everyday borrowed 20Rs
from friend to travel to
film city"
- Sharukh khan

"I failed in 8th standard"
-Sachin Tendulkar

"During my secondary
school, I was dropped
from school basketball
team"
-MichelI Jordan

"I was rejected for the
job in All India Radio
bcoz of my heavy voice"
- Amitabh Bacchan

"I used to work in petrol
Bunks"
- Dhirubhai Ambani

"I was rejected in the
interview of Pilot"
- Abdul Kalam

"I didn't even complete
my university education"
- Bill Gates

"I was a dyslexic kid"
- Tom Cruize

"I was raped at the
age of 9 "
- Oprah Winfrey

"I used to serve tea at
a shop to support my
football training"
- Lionel Messi

"I used to sleep on the
floor in friends rooms,
returning Coke bottles
for food, money, and
getting weekly free
meals at a local temple"
-Steve Jobs

"My teachers used to
call me a failure"
- Tony Blair

"I was in prison for 27
years"
-Nelson Mandela

and here comes the
"THALIVA"

"At the age of 30, I was
a bus conductor"
-Rajnikant

He worked for a textile factory for six months, without anyone suspecting that his parents were movie stars.
-  SURYA sivakumar

"Friends, there are
many such people who
struggled..

Life is not about what
you couldn't do so far,
it's about what you can
still do.
Wait n dont ever give up..
Miracles happen every
day....
                             
Rs.20 seems too much
to give a beggar but it
seems okay when its
given as tip at a fancy
restaurant.

After a whole day of
work, Hours at the gym
seem alright but helping
your Mother out at home
seems like a burden.

Praying to god for 3 min
takes too much time but
watching a movie for 3
hours doesn't.

Wait a whole year for
Valentine's day but we
always forget Mother's
day.

Two poor starving kids
sitting on the pavement
weren't given even a slice
of Bread but a painting of
them sold for lakhs of
Rupees.

We don't think twice
About forwarding jokes
But we will rethink about
sending this message on.

Think about It..
Make a change. Coz u can ....
Six Easy ways to earn, even after death.

1) Give a smile or gift to someone.
Each time u gift or smile, it will make someone's day.....u gain.

2) Donate a wheelchair to a hospital. Each time sick person uses it, u gain.

3) Participate in building an orphanage, hospital, school or college.
Anybody uses it, u gain.

4) Place a water cooler in a public place. Anybody drinks water, u gain.

5) Plant a tree. Whenever a person, animal sits in its shade or eats from it, u gain.

6) And the easiest of all is to Share this message with people. Even if 1 applies any of the
above, u gain.......
SD sir

Monday, August 3, 2015

என் மன வேதனை அதிர்ச்சிப் பகிர்வு...

தயவு செய்து இரண்டு நிமிடம் செலவு செய்து இதைப் படியுங்கள் .             
என் மன வேதனை அதிர்ச்சிப்
பகிர்வு...
தேங்காய் இன்று உடைத்து
வைத்து மிச்சம் இருந்தால்
குளிர்சாதனத்தில்
வைக்கிறோம். வெளியே வைத்தால் என்ன
ஆகும்?...
அப்படியானால்
லட்சக்கணக்கான தேங்காயை
உடைத்து வியாபாரிகள்
எப்படி பயன் படுத்துவார்கள்? தேங்காய் எண்ணை
தயாரிப்புக்கு
அடி நாதமாக விளங்கும் இந்த
கொப்பரையை பதப் படுத்த
இயற்கையான முறையில்
தயார் செய்ய இயற்கையாக காய வைத்தாலே போதும்.
நியாயமாக தொழில் செய்ய
மக்களுக்கு நன்மை தர நல்ல
தரமான கொப்பரை
இருந்தால்தானே சுத்தமான
தேங்காய் எண்ணை கிடைக்கும்?
ஆனால் பணம் செய்ய
எதையும் செய்யலாம்?
எப்படியும் செய்யலாம்?
என்ற சிந்தனை
அரசியல்வாதிகளிடம் இருந்து
வியாபாரிகளுக்கும்
பரவியதால் கொப்பரையில்
பட்டாசு தயாரிக்க பயன்படும்
கந்தகத்தைத் தடவி இருப்பு
வைக்கிறார்கள். தேங்காய் விலை ஏறும்
காலத்தில் இவர்களுக்கு
விலை அதிகமாக கிடைக்க
இந்த முறை பயன் படுகிறது.
சபரி மலை ஐயப்பன்
கோவிலில் வெடி வழிபாடு நடக்கும்.
கோடிக்கணக்கான தேங்காய்
உடைத்து வழிபாடும்
நடக்கும்.
கீழே கொண்டு போய்
சேர்த்து எண்ணெய் கம்பெனிகளிடம் சேர்க்க
காலதாமதம் ஆகும்.
அதனால் வெடி வழிபாடு
செய்யும் இடத்திலேயே
கந்தகம்(SULPHUR) பூசப்
படுகிறது. கந்தகத்தால் பாதுகாக்கப்பட்ட
கொப்பரைகள் பல
மாதங்களானாலும் ஒன்றும்
ஆகாது.
ஒரு பொருளில் புழு
வந்தாலோ,வண்டு வந்தாலோ,பூசனம்
பூத்தாலோ உயிர்த் தன்மை
இருக்கும்.
புழு,பூச்சி சாப்பிட்டது
போக மீதி கிடைப்பதை நாம்
எடுத்துக் கொள்ள வேண்டும்.இதுதான் நியதி...
ஆனால் நமக்கு இரண்டு
வருடம் ஆனாலும்
ஹார்லிக்ஸ் மாதிரி
கெடாமல் இருக்கணும்.
அப்புறம் கெமிக்கலை கலந்தால்தான் கெடாது.
கெமிக்கலில் முக்கினால்
என்னவாகும்!?
கொப்பரையில் உள்ள அமில
கந்தகம் உடம்புக்குள்
போனால் என்னவாகும்? கேன்சர் வரும்....
வயிறு கோளாறு வரும்....
ரத்த ஓட்டம் அதிகரித்து
ரத்தக்கொதிப்பு வரும்....
சுரப்பிகள் சீர் கெட்டு
நீரிழிவு நோய் வரும்.... உடல் பருமன் மாறுபடும்...
கிட்ணி பழுதடையும்......
இருதய துடிப்பு
எண்ணிக்கை மாறுபடும்....
புத்தி வேறுபடும்....
சோரியாசிஸ் தோல் வியாதிகள் வரும்....
சரி...இதோடு போனால்
பரவாயில்லை.
தேங்காய் விலை உயர்வு...
எள் விலை உயர்வு...
கடலை விலை உயர்வு... சூரியகாந்தி விதை
உற்பத்தி குறைவு...
இதனால் எண்ணெய் விலைகள்
கடும் விலை உயர
வேண்டும்.
ஆனால் அப்படி உயராமல் விலை குறைவாகதான்
உள்ளது.
ஒரு சிறிய பார்வை....
ஒரு லிட்டர் எண்ணெய்
தயாரிக்க சுமார் மூன்று
கிலோ விதை தேவைப்படும்.
நிலக்கடலை கிலோ
ரூ70*3kg=Rs210
எள் கிலோ ரூ90*3kg=Rs 270
சூரியகாந்தி விதை
ரூ55*3kg=Rs 165 மேலே சொன்ன விலை ஒரு
கிலோவுக்கு என்றாலும்
ஆட்கள் சம்பளம்,கரண்டு பில்
,கழிவு,லாபம் கணக்கிட்டால்
விலை எங்கே போகும்!?
இப்படி விலை பிரச்சனையால் எல்லா
இடத்திலும் ஒரு தந்திரத்தனம்
உருவாகிறது.
அதனால் மனித இனத்திற்கே
கேள்விக்குறி ஆகிறது?!
எப்படி?!... இனிதான் உங்களுக்கு
அதிர்ச்சி...???!!!
வளைகுடா நாடுகளில்
பெட்ரோலிய இன்டஸ்ட்ரியல்
கழிவு Liquid Paraffin ( திரவ நிலை மெழுகு  ) லிட்டர்
ரூபாய் 11 க்கு பெறப்படுகிறது.
அதை இங்கு கூலிங்
பிராசஸ் செய்து லிட்டர்
ரூபாய் 30க்கு எண்ணெய்
தயாரிப்பு
கம்பெனிகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.
இதை இறக்குமதி செய்வது
"பாமாயில்" என்கிற பெயரில்
இங்கு வருகிறது.
பால்ம் என்ற மரத்தில் இருந்து
எடுக்கப்படும் பாமாயில் உண்மையில் மிக நல்ல
எண்ணெய் தான்.
பனை மரம்,பேரீச்ச மரம்
போன்று பால்ம் ஒரு சிறந்த
மரம்.
ஆனால் உலகம் முழுவதும் பாமாயில் எண்ணெய் சப்ளை
செய்ய இயலுமா?
பால்ம் மரங்கள் உள்ளதா?!
சூரிய காந்தி எண்எணய்
வியாபாரம் தமிழகம் உட்பட
பாரதம் முழுவதும் விற்பனை ஆகிறது.
அதற்கு ஏற்ப சூரியகாந்தி
சாகுபடி தோட்டங்கள்
உள்ளதா?....இல்லையே!
சரி விடுங்கள்...
250 சூரியகாந்தி பூவில் உள்ள விதையில் 50 ml
சன்பிளவர் ஆயில் தான்
கிடைக்கும்.
125 கோடி மக்களுக்கு சன்
பிளவர் ஆயில் தயாரிக்க
எங்கே விவசாய சாகுபடி நடக்கிறது?!
அதுபோலதான்
பாமாயிலும்...
சரி.
நன்றாக போய் கொண்டு
இருந்த நேரத்தில் நாம் நல்லெண்ணை,கடலை
எண்ணெய்,தேங்காய்
எண்ணெய் பயன் படுத்தி
வந்தோம்.
இதயத்தை பாதுகாக்க
சூரியகாந்தி எண்ணெய் என்று நமக்கு பொய்
சொல்லி,விளம்பரம் செய்து
நம்மை ஏமாற்றியதை நாம்
அறிந்தோமா!?
உண்மையில் கொழுப்பு
சத்து நம் உடலுக்கு கட்டாயம் வேண்டும்.
ஒரு மிருகத்தில் இருந்து
எடுக்கப்படும் நெய்யே
நமக்கு நன்மை தந்தால் ஒரு
இயற்கையான தாவரத்தில்
இருந்து கிடைக்கும் எண்ணை நமக்கு செரிமானம்
ஆகாதா!?
சிந்தனை செய்யுங்கள்
மக்களே!!!
பெண்களுக்கு மாதவிடாய்
தொந்தரவு, குழந்தை பாக்கியம் இன்மை,ஆண்மை
கோளாறு,சிறு
வயதிலேயே வயதுக்கு
வருதல்,கேன்சர்,சிறு வயதில்
சர்க்கரை நோய் போன்ற
அனைத்து வராத நோய் வந்த பிரச்சனைக்கும் காரணம்
பாழாய் போன சன் பிளவர்
ஆயில் வந்த பிறகுதானே!!!!.
எண்ணெயை தொட்டுப்
பாருங்கள்.
அது பச பசன்னு கிரீஸ் மாதிரி இருக்கும்...
எள்,நிலக்கடலை,தேங்காய்,
சூரியகாந்தி எண்ணெய் என்ற
பெயரில் கந்தகமும்,பெட்ர
ோலிய கழிவுகளும்,அதே
எண்ணெய் போல தயாரித்த வாசனைகளும் கலந்தால் நம்
உடல் என்னவாகும்!?
மனிதச் செயலா இது?!
எண்ணெய் கலப்படம் ஒரு சர்வ
தேச மோசடி...
கொலை பாதக செயல்... நூடில்ஸ் மோசடியை விட
இது கோடிக்கணக்கான
மடங்கு விஷக் கொலைச்
செயல்!?
இது உயிர் உடலா?!கெமிக்கல்
பேரலா?! அரசின் தீர்வுதான் என்ன?
உணர்வு செத்து வேடிக்கை
பார்க்கும் குருட்டு
சுகாதார அமைச்சத்தை
இழுத்து இனி மூடி
விடலாம்... உங்கள் வருங்கால
சந்ததிகளை எண்ணி
உணர்ந்து பாரம்பரியம் காக்க
பகிருங்கள் என் சக
நண்பர்களே!!!...