Wednesday, June 17, 2015

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் செய்தி குறிப்பு

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் செய்தி குறிப்பு :
                                                                      தமிழகத்தில் சேலம் (ஏற்காடு), தூத்துகுடி, இராமநாதபுரம், கோவை, காஞ்சிபுரம்(ஆலந்தூர்), திருச்சி ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி, இடை தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொது தேர்தலுக்கு நமது தமிழக அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆதரவு கொடுத்த மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். மேலும் புரட்சி தலைவி அம்மா அவர்கள் போட்டியிடும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு  நமது சங்கத்தின் சார்பாக வருகின்ற ஜூன் 20 ம் தேதி சேர்மன் சோலை M ராஜா அவர்கள் தலைமையில் ஆதரவு கடிதம் கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. எனவே அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகின்றனர்.                                                         என்றும் அன்புடன்
தலைவர்- முருகதாஸ், செயலாளர்- ஜெகதீசன், பொருளாளர்- இளங்கோவன், மாநில செய்தி தொடர்பாளர்- பழனிவேல்ராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள். தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கம்.

No comments:

Post a Comment