Thursday, June 11, 2015

இத படிங்க பாஸ்

தயாரிக்கும் இடத்தில் தடுப்பதை விட்டு விட்டு தயாரித்தவனுக்கு தண்டனை வழங்குவதை விட்டு, அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகளை விட்டு விட்டு நடித்தவன், விற்றவன், வாங்கியவன் , பயன் படுத்துதுபவனை தண்டிக்கும் கேடுகெட்ட சட்டங்களை வைத்து எந்தத் தீமையையும் தடுக்க முடியாது!

பான் பராக் தயாரிப்பவனை விட்டுவாங்களாம்!
விற்கிறவனைப் பிடிப்பாங்களாம்!

சிகரெட் தயாரிப்பவன் விற்பவனை விட்டுடுவாங்களாம்!
பொது இடத்தில் புகைப் பிடிப்பவனை பிடிப்பாங்களாம்!

பிளாஸ்டிக் பை தாயாரிக்கிறவனை விட்டுடுவாங்களாம்!
கடையில் வைத்து சில்லறையில் விற்பவனை பிடிப்பாங்களாம்!

மதுவை அரசாங்கமே தயாரித்து விற்பாங்களாம்!
அதைக் குடிச்சிட்டு வண்டி ஓட்டினா பிடிப்பாங்களாம்!

கட்டிடம் இடிந்தால் கட்டினவனை பிடிப்பங்களாம்!
ஆனால் காசு வாங்கிக் கொண்டு அனுமதித்த அதிகாரிகளை விட்டுவாங்களாம்!

செம்மரத்தை கடத்துறவனை விட்டுடுவாங்களாம்!
கூலிக்கு மரம் வெட்டுறவனை சுட்டுருவாங்களாம்!

போங்கடா நீங்களும் உங்க சட்டமும்!

No comments:

Post a Comment