Friday, June 19, 2015

அந்த பெண் அடிக்கடி அவனது கண்ணில்பட்டாள்..!! .

கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண்
அடிக்கடி அவனது கண்ணில்பட்டாள்..!!
.
ஓரிரு முறை அவனை பார்த்து மெலிதாய் சிரிக்கக்கூட செய்தாள்..!!
‘போறதுக்குள்ள அவளை எப்படியாவது தூக்கிற(?) வேண்டியது தான்’
என்று முடிவு செய்தேன்...!!
.
பந்தி முடிந்து வரும் வழியில் தனியே மாட்டினாள் அந்த பெண்..!!
அவனிடம் .
“ஹாய்.. ஐ ம் தரணி..” என்றபடி அவளிடம் கையை நீட்டினேன்..!!
.
“ம்..” என்றாள் கேள்வித் தோரணையில்.
“ ஓ.. இங்கிலீஷ் தெரியாதா.. உன் பேரு என்னன்னு கேட்டேன்”
.
“ அதற்கும் “ம்..” என்றே பதில் தந்தாள்..!
“ச்.. தமிழுமா.., ஆப்கா... நாம்..க்யா ஹே.?.” என்றேன் எனது ப்ராத்மிக்
ஹிந்தியை மனதில் கொண்டு வந்து...
.
“ ஹிந்தியும் இல்லைனா என்ன... தெலுங்கா..?.” எனக்கு தெலுங்கெல்லாம் தெரியாது.. டி.வி.டியில படம் பாக்குறதோட
சரி...!!
.
இதற்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை..!
தலையை திருப்பி யாரையோ தேடினாள்..!
கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்
.
“ஆங்.. கண்டுபிடிச்சுட்டேன்.. கேரளா...? மலையாளம்.?.
கலரா இருக்கும் போதே நினைச்சேன்..!
இப்போ சொல்லு.. நிண்ட பேரு எந்தா.?”
.
இப்போது அவள் மெதுவாய் என்னைப்பார்த்துப் புன்னகைத்தாள்..!
.
“என் நிலைமை சிரிப்பா இருக்குதா.. இதப்பாரு எனக்கு வேற மொழியெல்லாம் தெரியாது.. அதனால நீயே சொல்லிடு..!
அட்லீஸ்ட் ஏதாவது பேசு அதவச்சாது நீ எந்த மாநிலம்னு தெரிஞ்சுக்கறேன்..!!” என்றேன்..
.
“...............”
.
அப்போது அங்கு வந்த அவளது அம்மா.,
“ஐயோ.. தரணி.! அவளுக்கு இன்னும் ஒரு வயசு கூட
ஆகலை. பேச்சு வராத குழந்தைய கேட்டா எப்படி பதில் சொல்லுவா..? அவ பேரு சுபா” என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனாள்...!!
.
எங்க கொண்டு வச்சேன் பாருங்க டிவிஸ்ட...Hahaha:-P
.
# என்ன நான் சொல்றது..?

No comments:

Post a Comment