Sunday, July 5, 2015

இறுதிப்போரில் கொத்துக் கொத்தாக கொன்றழித்த போது , நம் சகோதரிகள் மீது காமவெறியை செலுத்தியபோது , நம் குழந்தைகளை குடலுருவி மகிழ்ந்தபோது ஒரு நிமிட காட்சியை காட்ட மறுத்து நின்றது ஊடகங்கள்.

இறுதிப்போரில் கொத்துக் கொத்தாக கொன்றழித்த போது , நம் சகோதரிகள் மீது காமவெறியை செலுத்தியபோது , நம் குழந்தைகளை குடலுருவி மகிழ்ந்தபோது ஒரு நிமிட காட்சியை காட்ட மறுத்து நின்றது ஊடகங்கள். முகப்பு பக்க செய்தியாக்கவும்புகைப்படங்களை வெளியிடவும் தகுதியற்ற நிலையில் இருந்தது பத்திரிகைகள். 

அப்போது மக்களுக்கு போர் நிலை பற்றி தெரியாததால்தான் மக்களிடையே எழுச்சியில்லை என்று எண்ணி ஊடகங்கள் மீது கோபம் கொண்டோம் .ஆனால் இன்று இரண்டு லட்சம் உயிர்களை மாய்த்துக் கொண்டு தமிழ் இனத்தின் அவலத்தை உலகிற்கு உணர்த்தியிருகிறார்கள் ஈழத் தமிழர்கள். நீங்கள் என்னான்னா இப்பவும் மூடிக்கிட்டு இருக்கீங்க! இன்னும் என்னதான் உங்களுக்கு நடக்கணும் ? 

ஈழத்தில் இனப்படுகொலைதான்நடந்தது , சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த இணையதளத்தில் ஓட்டுப்போடச் சொல்லி இவ்வளவு கூப்பாடு போடவேண்டியுள்ளதை நினைத்தால் கூனிக்குறுகி சாகிறது மனது.

* உங்கள் பெயர் இரகசியமாகவே இருக்கும்
* உங்கள் தகவல் எதுவும் யாருக்கும் தெரியாது
* 30 வினாடிகள் செலவழித்தால் போதும்

இதுவரை நீங்கள் செலுத்தவில்லை எனில் எதையும் சிந்திக்காமல் தயவுசெய்து கீழே குறிப்பிட்டுள்ளஇணைப்பில் வாக்கினை செலுத்துங்கள் முதலில் : 

தமிழுக்கு : http://www.tgte-icc.org/tamil.asp
ஆங்கிலத்திற்கு : http://www.tgte-icc.org/index.asp

நன்றி !

No comments:

Post a Comment