Wednesday, May 13, 2015

சிவப்பு விளக்கு பகுதியில் தனது குழந்தை பருவத்தை கழித்த 20 வயது பெண்

மும்பையில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் தனது குழந்தை பருவத்தை கழித்த 20 வயது பெண்

பதிவு செய்த நேரம்:2015-05-13 12:25:52

மும்பை : மும்பை சிவப்பு விளக்கு பகுதியை சேர்ந்த ஒரு பெண் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தன் கடந்த கால வாழ்க்கையை குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, நான் என் குழந்தை பருவத்தை மும்பையில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் தான் கழித்து வந்தேன். எனக்கு 12 வயது இருக்கும் போதே என்னை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளனர்.

அதன் பிறகு அமெரிக்காவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று என் படிப்பு செலவுக்கு உதவி செய்தது. அந்த நிறுவனம் எனக்கு இடவசதி மற்றும் நாள் செலவுகளுக்கு உதவி தொகையையும் கொடுத்து உதவி செய்தது. இப்போது  நான் சரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டேன், இனி என் வாழ்க்கையில் நான் என்ன செய்யவேண்டும் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன் .

No comments:

Post a Comment