Sunday, May 17, 2015

கொஞ்சம் சிரிங்க பாஸ்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்...

"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"

"ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்."

#####

நோயாளி : டாக்டர் நீங்க ஒரு காரியம்….. செய்யணும்

டாக்டர் : நான் ஆபரேசன் மட்டும்தான் பண்ணுவேன்….. காரியம் எல்லாம் ஐயர் தான் செய்வார்.

#####

நீதிபதி: ஒரே வீட்டை ஏன் பதினைந்து முறை கொள்ளை அடிச்சே?

திருடன்: ஐயா நான் அவங்க பாமிலி திருடன், எப்புவுமே விஸ்வாசமா இருப்பேன்.

#####

1:- “ காதலிக்கும் மனைவிக்கும் என்னங்க வித்தியாசம்?”

கவிஞர்:- “ காதலி கரும்பைப்போன்றவள்
மனைவி இரும்பைப்போன்றவள்”

1: - ???

#####

ஆவி1 :விஷம் குடிச்சி சாக போனேன்..விஷத்துல கலப்படம் பிழைச்சிக்கிட்டேன்..

ஆவி2 :அப்புறம் எப்படி செத்த?

ஆவி1 :காப்பாத்த மருந்து கொடுத்தாங்க..மருந்துல கலப்படம் செத்துட்டேன்..

####

டீச்சர்: நாம் பேசும் மொழியை ஏன் தாய் மொழி என்று சொல்கிறோம் ?

மாணவி : எப்போதும் அம்மாக்கள் பேசுவதாலேயும், அந்த வாய்ப்பு அப்பாக்களுக்கு குறைவாக கிடைப்பாதலேயும், நாம் பேசும் மொழி தாய் மொழி என்று அறியப்படுகிறது.

#####

டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

நோயாளி -"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

#####

பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?

அம்மா-விமலாடா..

பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்பிடுறார்.

‪#‎செத்தான்டா_சேகரு‬

#####

''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''

''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிகிறீங்களா ?

#####

வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?

மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை அடிக்கிறதால அடி முட்டாள் சார்
R
####

நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?"

"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.

Now share n make ur friends smile

No comments:

Post a Comment