Thursday, May 7, 2015

சந்தோசம் எங்கே?

சந்தோஷம் எங்கே? வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?
இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ” இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்று வரை பல லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. 70 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

“சந்தோஷத்தின் வழி" யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்து விடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. “சும்மா இருப்பதே சுகம்’என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழ வேண்டும்!

18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்கள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளி எடுத்துக் கொண்டு முன்னேறுங்கள்.

Rules- Only admin will decide
Fill in the blanks

1) Strongest person of group💪 -___________

2)Coolest person of group👲👲-_________

3)Best DP of group👌👌-__________

4)Most active person of group🏃🏃-__________

5)Most inactive person of group🙇🙇-__________

6) Most decent person in group🙏🙏-___________

7)Most funny person in group😂😂-____________

8)Hero of group🚶-_________

9) Heroine of group 💃🙅-___________

10) Villain of d group 👺👹-____________

Admin pls respond fast 😜😜
[05/05 9:34 PM] ‪+91 80872 87248‬: Timeline Photos - வாட்ஸ் அப் மூலம் போலீசில் புகார்

பயனுள்ள பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்...!

சமூக வலைதளமான ’வாட்ஸ் அப்’-க்கு பொதுமக்களிடையே பெருகி வரும் ஆதரவையடுத்து ’வாட்ஸ் அப்’ மூலம் புகார் அளிக்கும் புதிய வசதியை நேற்று தொடங்கப்பட்டுள்ளது அதில் சில மாவட்டங்களின் தொலைபேசி எண்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது

திருச்சி: 96262 73399
மதுரை: 83000 21100
திருநெல்வேலி: 99527 40740
விழுப்புரம்: 96554 40092
தேனி: 88709 85100
சிவகங்கை: 94981 01670
விருதுநகர்: 85266 82266
வேலூர்: 94888 35716
நாமக்கல்: 94981 01020
ராமநாதபுரம்: 83000 31100
ஈரோடு: 94454 92686, 94981 75275
திண்டுக்கல்: 99949 34488
தூத்துக்குடி: 9487008800
தர்மபுரி: 94456 52253
ரயில் சேவை குறைபாடுகளுக்கு: 97176 30982
ரயில்வே பயணிகளின் காவல் உதவிக்கு: 99625 00500

சமூக வலைதளமான ’வாட்ஸ் அப்’-க்கு பொதுமக்களிடையே பெருகி வரும் ஆதரவையடுத்து ’வாட்ஸ் அப்’ மூலம் புகார் அளிக்கும் புதிய வசதியை நேற்று மதுரை நகர கமிஷனர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தி வைத்த போலீஸ் கமிஷனர் ஷைலேஷ் குமார் யாதவ், இந்த வசதி மூலமாக மதுரை நகரின் எந்த மூலையில் என்ன சம்பவம் நடைபெற்றாலும் அது பற்றிய தகவல்கள் உடனடியாக காவல்துறையின் கவனத்திற்கு வந்துசேரும் என்று தெரிவித்தார்.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் கொண்ட முக்கியமான பகுதியில் ஒன்றான மதுரைக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமென்று மற்றொரு காவல் துறை அதிகாரி தெரிவித்தார். மேலும், குற்றங்களைக் கண்டறியவும், குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதிலும் இந்த வசதி முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

8300021100 என்ற எண் மூலமாக இனி மதுரை போலீசாரை இனி வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளலாம்.

பணிக்குச்செல்லும் பெண்களும்
பள்ளிக்குச்செல்லும் குழந்தைகளும் கட்டாயம் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

No comments:

Post a Comment