Sunday, May 10, 2015

ஓவியர் ஏழுமலை ஆதிகேசவனின் அன்னையர் தின பதிவு


Ezhumalai Adikesavan
அம்மாவை பற்றி ஒரு கவிதை எழுதி
அன்னையர்தின வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்
என்று நினைத்தேன்.

முதல் வரியின் முதல் வார்த்தை "அம்மா" என்று ஆரம்பித்தேன்,,
அந்த வார்த்தையை தொடர்ந்து என்ன எழுதலாம்,,,,,,, என்று யோசிக்கிறேன்,, வார்த்தைகளை தேடுகிறேன் ,, எந்த வார்த்தைகளும் சரிநிகர் அமையவே இல்லை...

ஏன் என்று யோசிக்கும் தருணத்தில், பல நிமிடங்கள் கடந்தது, திடீரென்று நினைவுக்கு வந்தது அட முட்டாள் "அம்மா" என்பதே ஒட்டுமொத்த கவிதையை உள்ளடக்கிவிட்டதே!.

அதன் பின்னர் எப்படி கவிதையை தொடர முடியும் என்று ..... என் முட்டாள் தனத்தை நினைத்து நானே சிரித்து கொண்டேன் 

என் ஓவியத்துடன் என் அம்மாவிற்கும் உடன் அனைத்து அன்னையர்களுக்கும் " என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்"!!!

No comments:

Post a Comment