Sunday, May 24, 2015

காமெடி

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்..எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்.. நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்ஷுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..!

#####

மாப்பிள்ளைக்கு கவர்மென்ட் வேலை கிடையாதா?

போலீஸ், கோர்ட்னு கவர்ன்மென்டுக்கே வேலை கொடுக்கிறாரே…!

#####

வேட்டைக்காரர்: ஸ்காட்லாந்தில் இருந்த போது நான் நிறைய சிங்கங்களை சுட்டுத் தள்ளியிருக்கிறேன்.

நண்பர்: ஸ்காட்லாந்தில் சிங்கமே கிடையாது என்று புத்தகத்தில் படித்திருக்கிறேனே?

வேட்டைக்காரர்: எப்படி இருக்கும்? எல்லாத்தையும் தான் நான் சுட்டுத் தள்ளிட்டேனே!

#####

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில்
ஒருவனைக் கொன்றுவிட்டது.

அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த எலி கேட்டது.

எதுக்கு அவனைக் கொன்னேனு…

புலி : அந்தப் பரதேசி மூணு மணி நேரமா என்னைப்
பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனை”ன்னு.

#####

“எங்க மனைவிக்கு நான் கதவு மாதிரி…”

“எப்படி…?”

“அதான் அடிக்கடி சாத்து சாத்துன்னு சாத்தறாளே!”

#####

“எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வருது சார் …”

“எப்படி..?”

“நான் “சுடு தண்ணி”ன்னு சொல்றேன்; அவ அதை “காபி”ன்னு சொல்றா..!”

#####

நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?

யாரோ இங்கே தமிழாசிரியர் யாருன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.

#####

நர்ஸோட இதயத்தைத் திருடலாம்னு நினைச்சு அந்த ஆஸ்பத்திரியில பேஷண்ட் மாதிரி அட்மிட் ஆனது தப்பாப் போச்சு..!

ஏன் என்ன ஆச்சு?

டாக்டர் என் கிட்னியைத் திருடிட்டடார்..!

#####

எதுக்குங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முந்தியே வரதட்சணைப் பணத்தை கேட்குறீங்க?

அப்பதானே மாப்பிள்ளையை ஜாமீன்ல எடுக்க முடியும்…!

#####

தலைவரே தொண்டர்கள் கூட்டமா இருக்கிறப்ப ஆட்டோகிராஃப் போடாதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா ?

ஏன் இப்ப என்னாச்சு ?

கூட்டத்தோடு கூட்டமா எவனோ ஒருத்தன் உங்க செக்புக்குல கையெழுத்து வாங்கிட்டான்.

No comments:

Post a Comment