Tuesday, May 26, 2015

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும் நமது மிக முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தப்பட்டது.

சென்னையில் சங்க சேர்மன் தலைமையில் நிர்வாகிகள் குழு முக்கிய அமைச்சர்களுடன் சந்திப்பு
இன்று (26 / 05/ 2015 ) சேர்மன் திரு. சோலை M ராஜா அவர்கள் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் இணைந்த தமிழக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகிய முக்கிய அமைச்சர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பில் அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும் நமது மிக முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தப்பட்டது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...
பொன்.சங்கர்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்

No comments:

Post a Comment